முக்கிய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்களை நடத்த 15 நகராட்சிகளுடன் நியூ சவுத் வேல்ஸ் அரசு கூட்டுச் சேர்கிறது திங்கட்கிழமை, 7 நவம்பர் 2022 சிட்னி, ‘நியூகாஸில்’ (Newcastle) மற்றும் ‘இல்லவாரா’வில் (Illawarra) உள்ள நகராட்சிகளால் நடத்தப்படும் 21 முக்கிய கலாச்சார விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் 8 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ததன் மூலம் மாநிலத்தின் நிகழ்ச்சிகளின் அட்டவணை பெரிதாகி விட்டது. நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து முக்கிய பல்கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்காக, மாநிலத்தின் ஆறு நகரங்களில் உள்ள 15 நகராட்சிகளுக்கு ஆண்டுக்கு 500,000 டாலர்கள் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலாச்சாரத்துக்கான அமைச்சர் மார்க் கோரே (Mark Coure) கூறுகையில், நகராட்சிகளுடனான ஒவ்வொரு கூட்டாண்மையும் அவர்களின் நிகழ்வுகளைப் பெரிய சுற்றுலா அம்சங்களாகவும், உள்ளூர்ப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருவிகளாகவும் ஆக்க உதவும். “மாநிலத்தின் ஆறு நகரங்களில் உள்ள 15 நகராட்சிகளால் நடத்தப்படும் 21 வெவ்வேறு பல்கலாச்சார நிகழ்வுகள் நியூ சவுத் வேல்ஸின் சிறந்த கலாச்சாரம் மற்றும் மத ரீதியான பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகும்,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார். “இந்த நிதியுதவியானது இந்த நகராட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும்.” மானிய நிதியுதவி பெறும் நகராட்சிகள் பின்வருமாறு: ‘பிளாக்டவுன்’ (Blacktown) ...